Press Releases
தேசிய நினைவெழுச்சி நாள் 2011 – பேரெழுச்சியுடன்
பிரித்தானியாவில் ஒன்றுபட்ட நிகழ்வாக ஒரே இடத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்.
பிரித்தானியாவில் மாவீரர் நாள் நிகழ்வு இடமாற்றம்.

எதிர்வரும் 27.11.2011 அன்று ExCeL மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்ந தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் இடம் மாற்றப்பட்டுள்ளது.
தகுந்த ஒழுங்குபடுத்தலுடன் திட்டமிட்டு ஏற்பாடு செய்து அதிகளவு பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் சிலரின் செயற்பாட்டினால் ExCeL மண்டபம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது என்பதனை தங்களுக்கு வருத்தத்துடன் தெரியப்படுத்துகின்றோம்.
தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் 25.08.2011 முதல் ExCeL மண்டபத்தை முற்பதிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு பணிகளும் சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் குறிப்பிட்ட சிலரால் ExCeL மண்டபத்திற்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தம்மீது செலுத்தப்பட்ட அதிக அழுத்தங்கள் காரணமாக பொருத்தமில்லாத காரணங்களை முன்வைத்து ExCeL நிர்வாகத்தினால் மண்டபம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
Continue reading “பிரித்தானியாவில் மாவீரர் நாள் நிகழ்வு இடமாற்றம்.” »
2011 தேசிய நினைவெழுச்சி நாளிற்கான பொதுச் சந்திப்பு முடிவு
ஓரிடத்தில் அனைவரும் ஒன்றுகூடி தேசிய நினைவெழுச்சி நாள் எழுச்சியோடு நடைபெற வேண்டும். – பிரித்தானிய தமிழ் மக்கள் முடிவு.

எதிர்வரும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தேசிய நினைவேந்தல் அகவத்தினால் நேற்று (16௰௨011) ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்டது.
வடமேற்கு லண்டன் பகுதியின் 366A, STAG LANE, KINGSBURY, LONDON, NW9 9AA எனும் முகவரியில் அமைந்துள்ள RNB Venue மண்டபத்தில் மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை நடைபெற்ற இவ் முக்கிய கலந்துரையாடலில் பிரித்தானியாவின் பல பாகங்களிலும் இருந்து இருநூறிற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அகவணக்கத்தோடு ஆரம்பித்த இக் கலந்துரையாடலை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் சார்பில் அதன் தலைவி திருமதி. இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம், Dr. வசந்தன், தமிழ் இளையோர் ஒருங்கிணைப்பாளர் திரு. கபில் ஆகியோர் தலைமை தாங்கி நடாத்தினர். முதலில் உரையாற்றிய திருமதி. இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்கள் இந்த தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் Continue reading “2011 தேசிய நினைவெழுச்சி நாளிற்கான பொதுச் சந்திப்பு முடிவு” »
தேசிய நினைவெழுச்சி நாளிற்கான பொதுச் சந்திப்பு
அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாளை எழுச்சியோடு நடாத்த முன்வருவோம்.
எதிர்வரும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளை பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று தேசிய நினைவேந்தல் அகவத்தினால் நடாத்தப்படவுள்ளது.
16 / 10 / 2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள 366A, STAG LANE, KINGSBURY, LONDON, NW9 9AA எனும் முகவரியில் அமைந்துள்ள RNB VENUE மண்டபத்தில் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Continue reading “தேசிய நினைவெழுச்சி நாளிற்கான பொதுச் சந்திப்பு” »
இம்முறையும் ExCeLல் தேசிய நினைவெழுச்சி நாள் 2011
எதிர்வரும் 27-11-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் வழமைபோல் எக்சல் மண்டபத்தில் (EXCEL) நடைபெறவுள்ளது.
கடந்த 2 வருடங்களாக ஏற்பட்ட கசப்பான பட்டறிவுகளின் அடிப்படையில் தவறுகளைத் திருத்தி வெளிப்படைத் தன்மையுடன் இவ்வருட மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் தேசிய நினைவெழுச்சி நாள் 2011 ற்கான செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இச் செயற்குழுவின் ஊடாக ஆரம்பக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த கட்டத்தினை நோக்கி உறுதியாக நகர்கின்றோம்.
இச் சூழலில் சில குழப்பகரமான செய்திகள் சில விசமிகளாலும், சுயநலன் விரும்பிகளாலும் மின்னஞல்கள் ஊடாகவும், கைத்தொலைபேசி ஊடான குஞ்செய்திக ள் வாயிலாகவும் பரப்பப்பட்டும் வருகிறது. அத்தோடு இதற்கு பக்கபலமாக அண்மைக்காலமாக குழப்பகரமான பல செய்திகளை வெளியிட்டு தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் குழப்பங்களை விளைவிக்கும் செயலில் இறங்கியுள்ள சில ஊடகங்களிலும் இவ்வாறான விசமிகளின் செய்திகள் முகபுச்செய்தியாகவும் பிரசுரிக்கப்படுகிறது.
அத்தோடு எமது நிறுவனத்தின் பெயரான “தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம்” எனும் பெயரில் போலியான விளம்பரங்களையும், செய்திகளையும் மக்களைக் குளப்பும் நோக்கோடு வெளியிட்டும் வருகின்றனர். மக்களாகிய நீங்கள் போலியாநதும், குளப்பகரமானதுமான இவ்வாறான செய்திகளை புறம்தள்ளி எவ்வித குளப்பங்களுமின்றி இவ்வருடமும் வழமைபோல் EXCEL மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
எமது தாயகத்திற்காக தம்மையே அர்ப்பணித்த மாவீரர்ச் செல்வங்களை நினைவுகூரும் இந்த நன்நாளில் அவர்களின் தியாகத்தை எம் நெஞ்சங்களில் சுமந்தவர்களாக அனைவரும் ஓரிடமாக ஒன்றுகூடி ஒரு கணம் அவர்களுக்காக தலைகளை குனிந்து அகவணக்கம் செலுத்தி, அவர்களின் கல்லறைகளிலும், திருவுருவப் படங்களிலும் மலர்களை தூவி வணங்குவதே அம் மாவீரர்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதையாகும்.
எமது மக்கள் சிந்திய இரத்தமும், எமது மாவீரர்கள் புரிந்த தியாகமும் வீண்போகாது இருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்.
தற்போது செயற்பாட்டில் உள்ள தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் செயற்குழுவானது வெளிப்படையானது. இக்குழு யாரையும் ஒதுக்கியோ, யாரையும் புறம்தள்ளியோ செயற்படவில்லை. சுயநலமற்று இதயசுத்தியோடு தமிழ்த் தேசிய விடுதலையை நேசிக்கும் அனைவரையும் இணைத்தே செயற்படுகிறது.
இதுவரை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் ஏதாவது தவறுகள் நடைபெற்றிருந்தால் அதனை சுட்டிகாட்டும் கடமை தேசியத்தை நேசிக்கும் அனைவருக்கும் உள்ளது. இதே போன்று தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் மக்களாகிய நீங்கள் வழங்க முடியும்.
எம்மால் செயற்படுத்தப்படும் சகல பணிகளும் ஊடகங்கள் ஊடாக அவ்வப்போது வெளிப்படுத்தப்படும் என்பதையும், அவை எம்மால் அனுப்பப்பட்டவைதான் என்பதை உறுதிப்படுத்த எமது இணையத்தளத்தில்www.tnrf.co.uk சென்று அவற்றை உறுதி செய்து கொள்ளலாம் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். மாவீரர்களை நினைவுகொள்ளும் நிகழ்வான தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு தொடர்பான விபரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை எமது இணையத்தளத்திலும் www.tnrf.co.uk சென்று பார்வையிடலாம்.
மேலும் தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு தொடர்பான விபரங்கள் அறிய 02087338203 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது எனும் மின்னஞல் முகவரி ஊடாகவோ தொடர்புகொண்டு தெளிவுபெற்றுக்கொள்ளலாம்.
ஊடகத் தொடர்பு மையம்,
தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் - ஐக்கிய இராட்சியம்
URL: www.TNRF.co.uk | TEL: 020 8733 8203
Official Twitter @tnrfuk | Facebook Group: TNRF
தேசிய நினைவெழுச்சி நாள் 2011
தாய் நாட்டின் விடிவிற்காகவும், எதிர்கால சந்ததியினர் நிம்மதியாகவும், சுய கெளரவத்தோடும் சுதந்திரமாய் வாழவேண்டும் என்பதற்காய் தம் இளைமைக்காலத்தை அர்ப்பணித்து மண்ணினுள் வித்தாகி மரணத்தை வென்ற மாவீரர்களுக்காக ஒருகணம் தலைசாய்த்து வணங்கிடும் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் தொடர்பான விளம்பர துண்டுப்பிரசுரங்கள் எம்மால் பதிப்பு செய்யப்பட்டுள்ளது.
இத் துண்டுப் பிரசுரங்கள் தியாக தீபம் திலீபனின் 24 ஆவது நினைவு நாளான நாளை (26/09/2011) திங்கட்கிழமை முதல் அனைத்து வர்த்தக நிலையங்கள் மற்றும் ஆலயங்கள் போன்ற பொது இடங்களில் மக்கள் பெற்றுக்கொள்வதற்காக வைக்கப்படும் என்பதை அறியத் தருகிறோம்.
அத்தோடு இத் துண்டுப்பிரசுரம் பிரித்தானியா வாழ் தமிழர்கள் அனைவரது வீடுகளுக்கும் இம்முறை தேசிய நினவெழுச்சி நாளை முன்னெடுக்கும் செயற்பாட்டுக்குழுவின் தொண்டர்களால் முடிந்தளவுக்கு கொண்டு தரப்படும்.
பல இன்னல்களின் மத்தியிலும், வேண்டாத தமிழ் விரோத ஊடகங்களின் தீய பரப்புரைகளின் மத்தியிலும் வழமைபோல் தேசிய நினைவெழுச்சி நாளை எழுச்சியுடன் இவ்வருடமும் நடாத்துவதற்கான சகல வேலைகளையும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் முன்னெடுத்துள்ளது.
எத்தனை இன்னல்கள் எம் எதிர் வரினும் அவை அததையும் வென்று எம் இலக்கை நாம் வெல்ல எமது தேசத்தின் காவல் தெய்வங்களாகிய மாவீரர்கள் எமக்கு என்றும் துணை நிற்பார்கள்.
நன்றி,
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தேசிய நினைவெழுச்சிநாள் 2011



















