மாவீரர் கவிதைகள்

விடுதலை வரலாற்றில் தடம் பதித்த தியாக வேங்கைகளே!

வீசிவரும் காற்றில் விரிந்த சிறகுகளோடு பறந்துவிட்ட வீரமிகு பறவைகளே ஈரவிழிகள் எமக்கு இன்னும் காயவில்லை உங்கள் ஊரறியோம், உங்கள் உறவறியோம், உறவுகள் இட்ட பெயர் அறியோம் Read the rest of this entry »

பூணில் நஞ்சேற்றி

பூணில் நஞ்சேற்றி கருவறையில் தமிழ்த்தாய்க்கு பூசை செய்த தெய்வங்கள்! நாணில் நெஞ்சேற்றி பகைவன் பாசறை பாய்ந்த உணர்வில் செய்த உயிரம்புகள்! கோனின் நெறியில் கொடியோர் கோட்டை புகுந்து அந்தமில்லா ஒளி பிளம்பாநீர்! வேனில் வயதில் விடுதலை வேண்டி நீர் வேறெதுவும் கொள்ளாமல் சருகாநீர்! Read the rest of this entry »

ஓவென்று இரையும்…

ஓவென்று இரையும் ஊதற்காற்றே வேகம் குறைத்து வீசு தேவகுமாரர்கள் இங்கே துயில்கின்றனர் தூக்கம் கலைத்துத் தொலைக்காதே

கல்லெறியும் பொல்லக் கனத்தமழையே மெல்லப் பூவெறிதல்போல பொழிக இங்கே ராஜகுமாரிகள் உறங்குகின்றனர்

நிலமே மழைநீரை நிறையக்குடிக்காதே உள்ளே சில்லிட்டுப்போகும் மாவீரர் மேனிகள்

அதிர ஊண்டிநடப்பவரே எம் பிள்ளைகளின் கனந்த சயனம் கலையக்கூடும்

பூக்களையும் மெதுவாகப்போடுங்கள் காலப்பணியில் கண்துஞ்சாதிருந்தவர்கள் கால்நீட்டிக் கொஞ்சம் களைப்பாறுகிறார்கள்

Share With:
  • Print
  • Digg
  • StumbleUpon
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Bookmarks
  • LinkedIn
  • Live

ஆன்மா அழுகிறதே!

தாயக முகிலுக்குள் கருத்தரித்த

மழைத் துளிகளே!

கடலில் விழுந்து முத்தாகினீர்

கானகத்திடை வளமாகினீர்

தாய் மண்;ணில் உரமாகினீர்

சூரிய மகனின் வீச்சாகினீர்

ஈழவிருட்சத்தின் வேருக்கு

கனிமம் சேர்ந்த நீராகினீர் Continue reading “ஆன்மா அழுகிறதே!” »

Share With:
  • Print
  • Digg
  • StumbleUpon
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Bookmarks
  • LinkedIn
  • Live

வேழ‌மூர்ந்த‌ த‌மிழா

வேழ‌மூர்ந்த‌ த‌மிழா
ஈழ‌த்தாய் இன்று
ஈன‌ர்க‌ள் கையில்
ஆழ‌ப்பிற‌ந்த‌ த‌மிழா
அடிமையாய் வாழ்த‌ல் த‌குமா? தாய‌க‌ம்
மீழ‌ ம‌டிந்த‌ வீர‌ர் மேல்
ச‌த்திய‌ம் செய்து எழ‌டா

Share With:
  • Print
  • Digg
  • StumbleUpon
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Bookmarks
  • LinkedIn
  • Live

க‌ல்ல‌றையில் ச‌த்திய‌ம் தா

புதைத்த‌ இட‌த்தினிலே
புழுதி அட‌ங்க‌வில்லை
விதைத்த‌ வித்துட‌லில்
குருதி காய‌வில்லை அத‌ற்குள்
சிதைத்த‌ க‌ல்ல‌றையில்
சிலிர்த்து நிற்குமெங்க‌ள் ஆவி
ஈழ‌ம் மீட்டெடுத்து த‌மிழ்
இன‌த்தின் மான‌ம் காக்க‌வென‌
மார்த‌ட்டி வா த‌மிழா எம்
க‌ல்ல‌றையில் ச‌த்திய‌ம் தா தமிழா..

Share With:
  • Print
  • Digg
  • StumbleUpon
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Bookmarks
  • LinkedIn
  • Live
Remembrance Day 2010
DSC_0062 DSC_0113 DSC_0042 IMG_7903 DSC_5254 DSC_0140 DSC_5438 IMG_7839 MIT_1310 IMG_7645 MIT_1221 IMG_7794 MIT_1290 IMG_7828 IMG_7873 DSC_0188 IMG_7615 DSC_5240 DSC_5497 IMG_7897 MIT_1395 MIT_1394 IMG_7619 MIT_1324
27 NOV 2011 @ Murugadas Ninaivu Thidal
Follow TNRF Twitter
மாவீரர் கவிமழை

புதைத்த‌ இட‌த்தினிலே
புழுதி அட‌ங்க‌வில்லை
விதைத்த‌ வித்துட‌லில்
குருதி காய‌வில்லை அத‌ற்குள்
சிதைத்த‌ க‌ல்ல‌றையில்
சிலிர்த்து நிற்குமெங்க‌ள் ஆவி
ஈழ‌ம் மீட்டெடுத்து த‌மிழ்
இன‌த்தின் மான‌ம் காக்க‌வென‌
மார்த‌ட்டி வா த‌மிழா எம்
க‌ல்ல‌றையில் ச‌த்திய‌ம் தா தமிழா..

~~~~~~~~~~~~~~~~~~

மேலும்

உங்களுடைய கவிதைகளும் இங்கு இடம்பெறுவதற்கு எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்: tnrf.co.uk@gmail.com

Remember The Fallen